தமிழகம்

முகக்கவசம் அணியாவிட்டால் 6 மாதம் சிறை- நீலகிரி ஆட்சியர்… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஊட்டி:-

நீலகிரி மாவட்டத்தில் முகக்கவசம் அணியாவிட்டால், சமூக இடைவெளியை பின்பற்றாவிட்டால் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அதிரடியாக அறிவித்துள்ளார். 

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 513ஆக அதிகரித்துள்ள நிலையில், நோய் தடுப்பு நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் முறையான அனுமதியின்றி திருமணம் உள்ளிட்ட தனிநபர் நிகழ்ச்சிகளை நடத்தினால், ஓராண்டு சிறை தண்டனை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அதிரடியாக அறிவித்துள்ளார். 

ALSO READ  சென்னையில் வாகன கழிவுகளில் இருந்து தயாரிக்கப்பட்ட உலோக சிற்பங்கள் தயார்...

இதுதொடர்பாக நீலகிரி மாவட்ட ஆணையர் இன்னசென்ட் திவ்யா கூறியிருப்பதாவது:-

நீலகிரி மாவட்டம் உதகையில் முகக்கவசம் அணியாவிட்டால் தொற்றுநோய் சட்டம், 1897-ன் கீழ் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும். தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்காத தனி நபர்கள், நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ALSO READ  பொது இடங்களில் புகையிலைப் பொருள்களை மென்று துப்பினால் 6 மாதம் சிறை.....

பொது இடங்களில் நோயைப் பரப்பும் வகையில் எச்சில் துப்பினால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும். மேலும், தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியே சுற்றினாலும், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

காக்கி-கரண்ட் இடையே மோதல்:

naveen santhakumar

ஜூலை 19-ம் தேதி காலை 11 மணிக்கு +2 தேர்வு முடிவுகள் வெளியீடு- தமிழக அரசு அறிவிப்பு

naveen santhakumar

ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி திட்டம் – சென்னை பல்கலைக்கழகம் …!

News Editor