தமிழகம்

ஒரே நேரத்தில் இரண்டு வேலை-ஒன்னு போலீஸ் இன்னொன்னு திருடன்:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நெல்லை மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் வீடு புகுந்து கொள்ளை அடித்த போலீஸ் ஏட்டு கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்செந்தூரை சேர்ந்த கற்குவேல் என்பவர் கடந்த 2014ஆம் ஆண்டு காவல்துறை பணியில் சேர்ந்தார். அவர் ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். தொடர்ந்து இரவு நேர பணியில் ஆர்வம் காட்டி வந்த அவர், இரவில் கூட்டாளிகளுடன் சேர்ந்து பல்வேறு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. நெல்லை மற்றும் பெருமாள்புரத்தில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் பல்வேறு தடையங்கள் கண்டறியப்பட்டன.

அதில் கைரேகை தடையத்தை மூலமாக வைத்து ஏட்டு கற்குவேல் வசமாக மாட்டிக் கொண்டார்.நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் வீடு புகுந்து கொள்ளையில் ஈடுபட்ட அவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் பற்றி பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Share
ALSO READ  ஒதுக்கப்பட்ட நேரத்தை தாண்டி பட்டாசு வெடித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்- காவல் ஆணையர் எச்சரிக்கை:
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அரியலூர் வெற்றி வேட்பாளர் பேராசிரியர் ஜவஹர் !

News Editor

பொறியியல் பட்டப்படிப்பு முதல் செமஸ்டர் மாணவர்களுக்கு நவம்பர்-23-ம் தேதி முதல் வகுப்புகள் தொடக்கம்:

naveen santhakumar

90s கிட்ஸ்கள் மத்தியில் பிரபலமான சித்த வைத்தியர் காலமானார்..!

News Editor