தமிழகம்

மதுரை மக்களின் சூப்பர் ஐடியா…..சேதமடைந்த ஓடுகளை வைத்து சுவர் அமைப்பு…..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மதுரை:

மதுரையில் சேதமடைந்த ஓடுகளை ஓட்டையின்றி அடுக்கி குறைந்த செலவில் சுற்றுச்சுவர் அமைத்துள்ளனர்.

50 ஆண்டுகளுக்கு முன்பு நகர மற்றும்  கிராம பகுதிகளில் ஓட்டு வீடுகளே அதிகம் காணப்பட்டன.இந்த வகையான ஓடுகள் மானாமதுரையில் அப்போது ஏராளமான கம்பெனிகளில் தயாரிக்கப்பட்டு தமிழகம் மற்றும் பிற மாநிலங்களுக்கும் விற்கப்பட்டன.காலப்போக்கில் கிராமங்களில் கூட எங்கு பார்த்தாலும் கான்கிரீட் வீடுகளே உள்ளன.

ALSO READ  டிசம்பர் 1 முதல் கட்டணம் உயர்வு? தமிழக அரசு அதிரடி…!

ஒரு சில இடங்களில் மட்டுமே ஓட்டு வீடுகள் காணப்படுகின்றன.மேலும் வீடுகளின் முகப்புகளில் அலங்காரத்திற்காகவும் டிசைன் ஓடுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.கோவை,ஈரோடு,திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இன்னும் ஓட்டு வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. மானாமதுரை பகுதியில் தற்போது செயல்பட்டு வரும் ஒரு சில ஓட்டு கம்பெனிகளில் ஓடுகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

அப்போது சேதமாகும் ஓடுகள் மற்றும் நீண்ட நாட்கள் விற்பனையாகாத ஓடுகள் ஆகியவற்றை கொண்டு மானாமதுரை பகுதியில் சிலர் தங்களது கம்பெனிகளை சுற்றியும்,வீடுகளை சுற்றியும் அழகாக குறைந்த செலவில் சுற்றுச்சுவர் அமைத்து உள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அத்தியாவசிய காய்கறி விலைகளை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – ராமதாஸ்

naveen santhakumar

தமிழகத்தில் புதிய சட்டம்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

naveen santhakumar

நான் அரசியலில் ஈடுபடமாட்டேன் : தமிழருவி மணியன் அறிக்கை..!

News Editor