தமிழகம்

அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்துவதை யாராலும் தடுக்க முடியாது; தினகரன் திட்டவட்டம் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலாவின் 4 ஆண்டுகள் சிறை தண்டனை நிறைவடைந்ததை அடுத்து, கடந்த 27ஆம் தேதி விடுவிக்கப்பட்டார். இருப்பினும் உடல்நலக் குறைவு காரணமாக அவர் பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த ஞாயற்றுக்கிழமை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். 

டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சசிகலா, அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் பெங்களூரு புறநகர் பகுதியான தேவனஹல்லி அருகே உள்ள பண்ணை வீட்டுக்குச் சென்றார். இந்நிலையில்  வரும் பிப்.7 ஆம் தேதி சசிகலா தமிழகம் வருவார் என கூறிருந்த நிலையில் அவர் வரும் தேதி மாற்றப்பட்டு  பிப். 8 ஆம் தேதி காலை 9 மணிக்கு தமிழகம் வருவார் என தினகரன் தெரிவித்திருந்தார்.  

இன்று தென்காசியில் திருமலைக்கோவிலில் சாமி தரிசனம் செய்தபிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,“தீயசக்தி திமுகவை மீண்டும் ஆட்சிக்கு வர விடமாட்டோம். வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் சசிகலா நிச்சயம் போட்டியிடுவார். சசிகலா வந்த காரில் அதிமுக கொடியை பயன்படுத்தியதற்கு  டிஜிபியிடம் அல்ல, முப்படை தளபதிகளிடம் புகார் அளித்தாலும் ஒன்றும் செய்ய முடியாது.” கூறினார்.  


Share
ALSO READ  ஒரே நாளில் 3.5 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு !
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தீக் காயமா கவலை இனி வேண்டாம்… கைக்கொடுக்கிறது ரோட்டரி மற்றும் கங்கா மருத்துவமனை…

naveen santhakumar

அனைவரும் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தும் வரை கட்டுப்பாடுகளை கடைபிடிக்கவும் -உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி செளமியா சுவாமிநாதன்.

Admin

மதிமுகவின் 28 ஆம் ஆண்டு துவக்க விழா !

News Editor