இந்தியா

இன்றும் முதல் “ஜக்கா ஜாம்” போராட்டம் விவசாயிகள் அறிவிப்பு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மத்திய அரசு கொண்டுவந்துள்ள  வேளாண்  சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று விவசாயிகள் டெல்லியில்  இரண்டு மாதங்களுக்கு மேல் போராடி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே 11 முறை பேச்சுவார்த்தை நடைபெற்றாலும் அணைத்து  பேச்ச வார்த்தைகளும் தோல்வியிலேயே முடிந்தன.  


அதனையடுத்து  குடியரசு தினத்தன்று நடந்த ட்ராக்டர் பேரணியில் விவசாயிகளும் போலீசார்களுக்கு இடையே வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் ஒரு விவசாயி உயிரிழந்தார்.மேலும் பலர் காயமடைந்தனர். இதன் காரணமாக டெல்லியில் விவசாயிகள் போராடி வரும் சிங்கு, காசிபூர், டிக்ரி போன்ற இடங்களில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.

அதனையடுத்து போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக யாரும் உள்ளே நுழைந்து விடகூடாது என்பதற்காக காவல்துறை பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.அந்த வகையில் டெல்லி புறநகர் எல்லையில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.

ALSO READ  ஒரு தலைக்காதல் விபரீதம் - கல்லூரி மாணவி படுகொலை

மேலும் போராட்டம் எதிரொலியாக எல்லைகள் மூடப்பட்டுள்ளதால் டெல்லியில் கடும் வாகன போக்குவரத்து ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் டெல்லியில் போராடும் விவசாயிகள்  ‘ஜக்கா ஜாம்’ எனும் சாலை மறியல் போராட்டத்தை இன்று முதல் முன்னெடுக்க இருப்பதாக அறிவித்துள்ளனர். 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

புதுச்சேரியில் குறைய தொடங்கிய கொரோனா தொற்று !

News Editor

மாநிலங்களவை உறுப்பினராக எல்.முருகன் கனிமொழி சோமு, ராஜேஸ்குமார் மூவரும் போட்டியின்றி தேர்வு

News Editor

அருகில் யாருக்கேனும் கொரோனா இருக்கா என ட்ராக் செய்யும் செயலி….

naveen santhakumar