இந்தியா

ஒரு தலைக்காதல் விபரீதம் – கல்லூரி மாணவி படுகொலை

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

திருவனந்தபுரம்:-

காதல் விவகாரத்தால் கல்லூரி மாணவி படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக சக மாணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் வைக்கோம் தலயோழபரம்பை சேர்ந்தவர் நிதினா மோல் ( வயது 22) செயின்ட் தாமஸ் கல்லூரியில் 3ம் ஆண்டு சமையற்கலை படித்து வந்தார். இன்று தேர்வு எழுதுவதற்காக கல்லூரி சென்றுள்ளார்.

அப்போது வள்ளிச்சீராவைச் சேர்ந்த அபிஷேக் என்பவரும் தேர்வு எழுத வந்து உள்ளார். அபிஷேக் தேர்வு எழுவதை பாதியிலேயே நிறுத்தி வெளியே விட்டு சென்றார்.

கல்லூரி மண்டபத்தில் காத்திருந்த அவர், நிதினா தேர்வு எழுதிவிட்டு வந்தவுடன் அவருடன் சண்டையிட்டுள்ளார். பின்னர் திடீர் என அபிஷேக் பேப்பர்கட்டரை கொண்டு நிதினா கழுத்தை அறுத்து விட்டார்.

ALSO READ  தமிழகத்தில் அமலாகுமா கடும் ஊரடங்கு உத்தரவு?

இதில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த நிதினாவை உடனடியாக மற்ற மாணவ மாணவிகள் நிதினாவை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவர் உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்து விட்டனர்.

நிதினா கழுத்தை அறுத்த அபிஷேக் அதே இடத்தில் போலீசார் வரும் வரை இருந்து உள்ளார். போலீசார் அவரை கைது செய்தனர். காதல் விவகாரத்தில் 22 வயதான மாணவியை கொன்ற 21 வயதான அபிஷேக்கை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சபரிமலை ஐயப்பன் கோவில் இன்று நடை திறப்பு

News Editor

கொரோனாவை விட கொடிய நோய்த்தொற்று உருவாகக்கூடும்?

Shanthi

கட்சி தாவிய எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவை செல்ல தடை- உயர்நீதிமன்றம் அதிரடி… 

naveen santhakumar