சீனாவின் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. இதனையடுத்து இந்த வைரஸ் தற்போது மரபியல் மாற்றமடைந்து பல நாடுகளில் இரண்டாம் அலையை தொடங்கியுள்ளது கொரோனா வைரஸ். அந்தவகையில் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தனது இரண்டாவது அலையை தொடங்கிவிட்டது.
இந்தியாவில் தொடக்கத்தில் அதிகமான எண்ணிக்கையில் தொற்று இருந்து வந்த நிலையில், பின்னர் இந்தியா முழுவதும் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வந்தது. ஆனால் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அந்தவகையில் கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. நேற்று ஒரே நாளில் 1,300 கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அம்மாநில முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பா சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார் அப்போது அவர் பேசுகையில், “பள்ளி, கல்லூரிகள் எப்பொழுதும் போல் இயங்கும். மாணவர்கள் தங்கள் வீடுகளில் இருப்பதைவிடப் பள்ளிகளில் கவனமாகவும் ஒழுக்கத்துடனும் ஒரே இடத்தில் இருப்பார்கள். மேலும் அடுத்த 15 நாட்களில் தேர்வுகள் நடைபெறும் என்பதால் பெங்களூரில் மட்டும் ஊரடங்கு அமல்படுத்துவதற்கான வாய்ப்பு இல்லை” என்றார்.
#Karnadaka #Yediyurappa #TamilThisai #SchoolStudents #exam #Lockdown #Corona #Coronavirus #Cobid19