இந்தியாவில் தொடங்கத்தில் அதிகமாக இருந்த கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில தினங்களாக சினிமா பிரபலங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் ராதிகா சரத்குமாருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவின. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த நடிகை ராதிகா, எனக்கு கொரோனா இல்லை என மறுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “அனைவரின் அன்புக்கும் நன்றி. எனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு எல்லாம் இல்லை. தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் எடுத்துக் கொண்ட பிறகு உடம்பு வலி மட்டுமே. என் உடல்நலம் மற்றும் வழக்கு குறித்து ஆன்லைன் மீடியாக்கள் கண்டதையும் எழுதுகின்றன. நாங்கள் மேல் நீதிமன்றங்களில் முறையிடுவோம். நான் வேலைக்கு திரும்பிவிட்டேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
#corona #Coronavirus #covid19 #TamilThisai #Tamilcinema #Cinema #CineUpdate #Tamilmovie #ishwaryalekshmi #cinema #Vishal #Dhanush #coronapositive #RadhikaSarathkumar