தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
தமிழகத்தில் கொரோனா 2வது அலையை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி கோவில்களில் பொதுமக்கள் தரிசனம் செய்யவும், திருவிழாக்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சேலம் மாநகர பகுதியில் உள்ள திருநங்கைகள் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக விழுப்புரத்தில் உள்ள கூத்தாண்டவர் கோவிலுக்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் சேலம் செவ்வாபேட்டை பகுதியில் உள்ள பெரியாண்டிச்சி அம்மன் கோவிலில் கூத்தாண்டவர் திருவிழா நினைவாக சிறப்பு வழிபாடு செய்தனர். மேலும் தற்போது நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா நோய் தொற்று குறைந்து உலக மக்கள் நலம் பெற வேண்டி வழிபாட்டில் ஈடுபட்டனர்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.