சினிமா

கையை மீறிய கொரோனா பாதிப்பு; 1 கோடி ரூபாய் நிதியளித்த பிரபல நடிகர் 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தியாவில் தொடக்கத்தில் அதிகமாக இருந்த கொரோனா தொற்று படிப்படியாக குறைந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. நாட்டின் பல மாநிலங்களில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இதனை தடுப்பதற்கு மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இருப்பினும் தொற்று குறைந்தபாடு இல்லை .


இந்நிலையில் டெல்லி, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பரவல் கை மீறி சென்றுள்ளதால்  மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் பல நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கிடைக்காததால் கொத்து கொத்தாக செத்து மடிகின்றனர். இப்பிரச்சனையை சமாளிப்பதற்கு மத்திய மாநில அரசுகள் திணறி வருகின்றன.

இந்நிலையில், நடிகர் அக்ஷய்குமார் ரூ. 1 கோடி நிவாரண நிதியாக வழங்கியுள்ளார். இந்த தொகையை கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் நடத்தும் தொண்டு நிறுவனத்துக்கு அளித்துள்ளார். இதற்கு கவுதம் கம்பீர் நன்றி தெரிவித்து சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்… “தேவைப்படுபவர்களுக்கு உணவு, மருத்துவ உதவி, ஆக்‌சிஜன் வழங்க ரூ.1 கோடி நன்கொடை அளித்த அக்‌ஷய்குமாருக்கு நன்றி” என பதிவிட்டுள்ளார். 

ALSO READ  10,12 ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு; ஐசிஎஸ்இ, ஐஎஸ்சி கவுன்சில் அறிவிப்பு ! 

நடிகர் அக்ஷய் குமார் கடந்த வருடம் கொரோனா தொற்று பரவ ஆரம்பித்த போது ரூ. 25 கோடி நிதியை நிவாரணமாக அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வேகமெடுக்கும்  கொரோனா; படப்பிடிப்புகள் ரத்து !

News Editor

சிம்பு நடிக்கும் படத்தின் தலைப்பு வெளியாகியது..!

News Editor

மேடையில் நடிகையின் மார்பகத்தை பற்றி பேசிய விஜய் தேவரகொண்டா

Admin