அரசியல்

டெல்டாவில் ஒரு ஆறுதல்; திமுகவுக்கு கடும் பின்னடைவு ! 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகம், அசாம், மேற்கு வங்கம், கேரளா, புதுச்சேரி ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

இதில் தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று (2.5.2021) காலை  8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு பிறகு இ.வி.எம் இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. 

தற்போதைய நிலவரப்படி எடப்பாடி பழனிசாமி  தலைமையிலான அதிமுக கூட்டணி 91 சட்டமன்ற தொகுதிகளிலும், ,ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி 142 சட்டமன்ற தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது.  கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கூட்டணி 1 சட்டமன்ற தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.

ALSO READ  அடக்கொடுமையே!!… தமிழகத்தில் அரசு வேலைக்காக காத்திருப்பது இவ்வளவு பேரா?

இந்நிலையில் நன்னிலம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட அமைச்சர் ஆர் காமராஜ் 27,887 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார். இவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் வி.பத்மநாதன் 4,367 பெற்று கடும் பின்னடைவை சந்தித்து வருகிறார். டெல்டா மாவட்டங்களில் நன்னிலம் தொகுதியில் மட்டும் அதிமுக முன்னிலை வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அ.தி.மு.க.வின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் நியமனம்..

Shanthi

ஓ.பி.எஸ்-இ.பி.எஸ்.நேரடி மோதல்; மீண்டும் கூடிய எம்.எல்.ஏக்கள் கூட்டம் !

News Editor

அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு !

News Editor