கிரிக்கெட் வீரர்கள் சினிமாவில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். அந்த வகையில் சர்வதேச அளவில் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்ட 5 வீரர்கள் தமிழ் சினிமாவில் நடித்துள்ளனர்.
சடகோபன் ரமேஷ்:-
குறுகிய காலமே இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற்றிருந்தாலும் நட்சத்திர கிரிக்கெட் வீரராக வலம் வந்தவர் சடகோபன் ரமேஷ்.
இடது கை பேட்டிங்கிங், ஸ்பின் பவுலிங் என ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஆல்-ரவுண்டராக இந்திய அணிக்காக விளையாடியவர்.
இவர் ஜெயம் ரவி நடித்த சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் அவரது அண்ணன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
அதோடு, போட்டா போட்டி என்ற திரைப்படத்தில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார் சடகோபன் ரமேஷ்.
மேலும் சடகோபன் ரமேஷ் திரைத்துறையில் சவுண்ட் இன்ஜினியர் என்பது குறிப்பிடத்தக்கது.
இர்பான் பதான்:-
இந்தியாவின் மிகச் சிறந்த ஆல்ரவுண்டர். இடது கை வேகப்பந்து வீச்சாளரான இவர் அதிரடியாக விளையாடி ரன்களை குவிப்பார்.
இவர் தற்போது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளிவர காத்துக்கொண்டிருக்கும் கோப்ரா படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
ஹர்பஜன் சிங்:-
இந்திய அணியின் நம்பிக்கையான சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக நிறைய சாதனைகளை புரிந்தவர்.
பல போட்டிகளில் இந்திய அணி வெல்வதற்கு முக்கிய பங்காற்றி உள்ளார்.
தற்போது விரைவில் வெளிவர இருக்கும் பிரண்ட்ஷிப் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அர்ஜூன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மேலும், லாஸ்லியாவும் இந்த படத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வருண் சக்கரவர்த்தி:-
ஆரம்பத்தில் பஞ்சாபின் ஐபிஎல் தொடரில் விளையாட தொடங்கினார். இந்த அணியில் சிறப்பாக விளையாடி இந்திய அளவில் பிரபலமானார்.
ஸ்பின் பவுலரான இவர் கிரிக்கெட்டை மையமாக வைத்து விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்த ஜீவா படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
டுவைன் பிராவோ:-
டி20 தொடரில் ஒரு மிகச் சிறந்த ஆல்ரவுண்டர் என்றால் பிரபுவுக்கு முக்கியமான இடம் உண்டு.
ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக பல போட்டிகளில் விளையாடி வெற்றி பெறச் செய்துள்ள இவருக்கு ரசிகர்கள் ஏராளம்.
இவரை சித்திரம் பேசுதடி இரண்டாம் பாகத்தில் ஒரு பாடலில் ஆட வைத்தனர். இந்த பாடல் தமிழகமெங்கும் வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது.
அதேபோல முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் சில படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இவர்களுக்கெல்லாம் முன்னோடியாக 30 வருடங்களுக்க் முன்பே 1990 ஆம் ஆண்டு பிரபு நடிப்பில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான ராஜா கைய வச்சா படத்தில் அன்றைய காலகட்டத்தில் பிரபலமாக இருந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளார்.
இவர்களைத் தவிர முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் அஜய் ஜடேஜா, யுவராஜ் சிங், வினோத் காம்ப்ளி, அனில் கும்ப்ளே, சலில் அங்கோலா ஆகியோரும் திரைப் படங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.