திருவனந்தபுரம்:
கேரளாவில் இரண்டு டோஸ் தடுப்பூசியும் செலுத்திக்கொண்ட 40 ஆயிரம் பேருக்கு கொரானா தொற்று ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது .
கேரள மாநிலத்தில் கொரானா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் தினசரி கொரானா தொற்று ஏற்படுவதில் பாதிக்கும் மேற்பட்ட கொரானா தொற்றாளர்கள் கேரளா மாநிலத்த்தில் தான் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
மத்திய அரசின், ‘இன்சாகாக்’ எனப்படும் மரபணு வரிசைமுறை கண்காணிப்பு அமைப்பின் இயக்குனர் சமீபத்தில் அளித்த பேட்டியில், கேரளாவில் அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் கூட்டம் கூட அனுமதி அளித்த காரணத்தால் கொரானா தொற்று பரவல் அதிகரித்து உள்ளது என தெரிவித்துள்ளார்கள்.
ஏற்கனவே இரு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட சுமார் 40 ஆயிரம் பேரிடம் கொரானா தொற்று பரிசோதனை மேற்கொண்டதில் கொரானா தொற்று உறுதியானது கண்டறியப்பட்டுள்ளது என கேரள மாநில சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே பாதித்த நோய் தொற்றால் உண்டாகியிருக்கும் எதிர்ப்பு சக்தியை மீறி கொரானா தொற்று ஏற்பட்டுள்ளது கவலைக்குரிய விஷயம் என தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.