நாடாளுமன்றத்தில் வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை போராட்டம் தொடரும் என விவசாயிகளின் சங்க தலைவர் ராகேஷ் தியாகத் டிவிட்.
இன்று குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு நாட்டு மக்களிடையே உரையாடிய பிரதமர் மோடி,
விவசாயிகளின் முன்னேற்றத்தை மனதில் கொண்டே வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டது. பின்னர் வேளாண் சட்டங்களை விவசாயிகள் எதிர்த்து வருகின்றனர். எனவே எதிர்வரும் குளிர்கால கூட்டத்தொடரில் வேளாண் சட்டங்களை முறைப்படி திரும்ப பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார்.
மேலும் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு திரும்பி செல்லுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார். இதற்கு விவசாய சங்கத்தினர், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் நாடாளுமன்றத்தில் வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை போராட்டம் தொடரும் என விவசாயிகளின் சங்க தலைவர் ராகேஷ் தியாகத் ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார்.
அவரது அறிவிப்பில்,
வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் உடனடியாக திரும்பப்பெறப்படாது. நாடாளுமன்றத்தில் வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை காத்திருப்போம் என்று ராகேஷ் திகாயத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, வேளாண் விளை பொருட்களுக்கு தக்க கொள்முதல் விலை அளிக்க வேண்டும் என்றும், மின்சார சட்டத்திருத்த மசோதாவையும் மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்றும் சம்யுக்த கிசான் மோர்ச்சா தெரிவித்துள்ளனர்.