ஏழரை சனியின் தாக்கத்தை மெல்ல மெல்ல உணரத் தொடங்கி இருக்கும் மகர ராசி அன்பர்களே மனம் ஒரு நிலையில் இருக்காது. சின்ன சின்ன விஷயத்திற்கும் கோபம் அதிகமாக வரும். எல்லாரிடத்திலும் சண்டை போட்டுக் கொண்டிருப்பீர்கள். சின்ன விஷயத்தை பொறுத்தவரை யாரிடமும் சண்டை போட வேண்டாம். கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது.
எந்த ஒரு வார்த்தையை பேசுவது ஆனாலும் முன் யோசித்து பேச வேண்டும். உங்களுடைய நாக்கில் இருந்து வரும் வார்த்தைகளே பின்னாளில் உங்களுக்கு எதிரியாக மாறும் வாய்ப்பு உள்ளது. சிறிய விஷயத்தை கூட உங்களை சுற்றி இருப்பவர்கள் புரிந்து கொள்ள இயலவில்லையே என்று மனதுக்குள் தவித்துக் கொண்டு இருக்கிறீர்கள். உண்மையிலேயே ஏழரைசனியின் தாக்கத்தில் நீங்கள் இருப்பதனால் உங்களால் தான் அடுத்தவர்களை புரிந்துகொள்ள முடியாத நிலையில் இருக்கிறீர்கள் என்பதை உணர வேண்டும். மனதில் ஒரு பெரிய பாறாங்கல்லை எடுத்து வைத்தது போல் உணர்ந்து கொண்டே இருப்பீர்கள்.
வேலை செய்யும் இடங்களில் நிதானமும் எச்சரிக்கையும் தேவை. கடுமையான ஜென்ம சனியின் தாக்கத்தில் இருக்கிறீர்கள் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் குறிப்பாக உத்திராடம் திருவோணம் நட்சத்திரக்காரர்களுக்கு அதிக கவனம் எல்லா விஷயங்களிலும் தேவை. மாதம் முழுவதும் இரண்டாமிடத்தில் சஞ்சரிக்கும் சூரியனும் புதனும் உங்களுடைய குடும்பத்தில் சிறுசிறு பிரச்சனைகளை ஏற்படுத்திக் கொண்டே இருப்பார்கள். வரவேண்டிய பணம் சரியான நேரத்தில் கைக்கு வர முடியாத சூழ்நிலை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு. இதை புரிந்து கொண்டு அதற்கேற்றார் போல் உங்களுடைய செலவுகளை திட்டமிட்டுக்கொள்ளுங்கள்.
உங்களுடைய யோகாதிபதியான சுக்கிரன் உச்சம் பெற்ற நிலையில் இருப்பது ஒரு மிக சிறப்பான அமைப்பாகும் ராசிக்கு மூன்றாம் இடத்தில் உச்சம் பெற்றிருக்கும் சுக்கிரன் சிறு தூரப் பயணங்கள், நண்பர்களால் ஆதாயம் ஏற்படுத்தும். பெண்களால் மிகுந்த மன மகிழ்ச்சியும் ஏற்படும். நான்காம் இடத்திற்கும் 11ம் இடத்திற்கும் அதிபதியான செவ்வாய் பன்னிரெண்டாம் இடத்தில் மறைவது தாயார் வழி மூலம் அல்லது மூத்த சகோதரன் சகோதரி இந்த உறவுகளால் விரயங்களை ஏற்படுத்திக் கொடுக்கும். அந்த செவ்வாய் ஆட்சி நிலையிலுள்ள குருவுடன் இணைந்து இருப்பது அந்த செலவுகள் அனைத்தும் சுப செலவுகளாக இருக்கும் என்பதையும் சுட்டிக்காட்டுகின்றது.
இளம் பருவத்தினருக்கு நல்ல மாற்றங்கள் ஏற்படும். ஏழரை சனியின் தாக்கத்தில் உள்ள இளைஞர்கள் சில தீய பழக்கங்களை கற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு. பெற்றோர்கள் இவர்களை கவனத்துடன் கையாள வேண்டும். எல்லா இடத்திலும் கவனத்துடனும் நிதானத்துடனும் செயல்பட்டு இந்த மாதத்தை சிறப்பாக அமைத்துக் கொள்ளுங்கள்.சந்திராஷ்டம நாட்கள் அன்று அனைத்து விஷயங்களிலும் கவனம் தேவை. புதிய முயற்சிகளை தவிர்க்க வேண்டும்.
சந்திராஷ்டம நாட்கள்: 8-ம் தேதி அதிகாலை 6:52முதல் 10-ம் தேதி அதிகாலை 6:22வரை.
வழிபட வேண்டிய தெய்வம்: விநாயகர்.
இந்த ஜோதிட பலன்களை கணித்தவர் திருமதி. ஜனனி ஸ்ரீதர் (DNA astrologer) . மேலும் சந்தேகங்கள் மற்றும் பலன்களுக்கு astrotamiltalk@gmail.com என்ற இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.
மேலும் காணொளியில் காண: https://bit.ly/2OukP6E