காகம் சனீஸ்வரருக்குரிய வாகனம். காகம் எமலோகத்தின் வாசலில் இருக்கும் என்றும், எமனின் தூதுவன் என்றும் சொல்லப்படுகிறது. நாம் உணவு உண்ணும் முன் காகத்துக்கு ஒரு பிடி உணவு வைக்க வேண்டும் என்கின்றனர் நம் முன்னோர்கள் அது எதற்காக? என்பதைப் பார்ப்போம்.
தினமும் காலையில் நாம் எழுந்தவுடன் காகத்தின் சத்தம் கேட்டால் நினைத்த காரியம் வெற்றி பெறும். அதுமட்டுமின்றி நம் வீட்டு வாசலை நோக்கி கரைந்தால் நல்ல பலன் உண்டு.
தினமும் காலையில் காகத்திற்கு சாதம் வைத்து வந்தால், வாழ்வில் திடீரென்று நடக்கும் அசம்பாவிதங்கள், விபத்துக்கள், வீண் பழி போன்றவை உங்களை நெருங்கவே செய்யாது.
அதிகாலையில் எழுந்து கரைதல், உணவை உடனே உண்ணாமல் தன் கூட்டத்தினரை அழைத்து பகிர்ந்து உண்ணுதல், பிறர் காணாத வகையில் ஜோடி சேருதல், மாலையிலும் குளித்தல், ஏதாவது ஒரு காக்கை இறந்து விட்டால் அனைத்து காகங்களும் ஒன்று கூடி கரைதல் என்பது காக்கை இனத்தில் பொதுவான குணங்கள். இவற்றுள் ஒரு காக்கை இறந்தால் அனைத்து காகங்களும் கூடி நின்று கரைதல் என்பது, அஞ்சலி செலுத்துவதற்கு சமமாகவே கருதப்படுகிறது.
இதனை தொடர்ந்து தினமும் காலையில் நாம் காகத்திற்கு உணவு வைப்பதன் மூலம் நம் வாழ்வில் தீராத கடன் தொல்லைகள் மற்றும் புத்திர சந்தான பாக்கியம் போன்ற முக்கியமான பலன்கள் தடையின்றி நமக்கு கிடைக்க பெறும்.
எனவே நாம் உணவு சாப்பிடுவதற்கு முன்பாக காகத்திற்கு உணவு வைத்து விட்டு தான் சாப்பிட துடங்க வேண்டும். அப்போது தான் அவர்கள் மனம் குளிர்வதோடு, வயிறும் குளிர்ந்து நமக்கு ஆசி வழங்குவார்கள்.
அப்படி தினமும் காகத்திற்கு உணவு வைக்க முடியாவிட்டதாலும், அமாவாசை, மகாலய அமாவாசை, தை அமாவாசை போன்ற பெரிய அமாவாசை தினங்களில் முன்னோர்களின் பெயரைச்சொல்லி காகத்திற்கு உணவளிக்க வேண்டும். இதனால் சனிபகவானின் கெடுபலன்கள் தீர்ந்து அவரின் அருள் நமக்கு கிடைக்கும்.