ஹைதராபாத்:-
ஒரு திரைப்படமானது எவ்வளவு வசூல் செய்கிறது எனும் விபரத்தை எந்த மொழி திரையுலகமும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதே இல்லை.
இந்நிலையில் தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் திரைப்படங்கள் எவ்வளவு வசூல் செய்கின்றன என்ற விபரத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க முடிவுசெய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மாதம் சங்கராந்தியை முன்னிட்டு வெளியான மகேஷ்பாபுவின் சரிலேரு நீக்கெவரு (Sarileru Neekevvaru), அல்லு அர்ஜூனின் அலா வைகுந்தபுரம்லோ (Ala Vaikunthapurramloo) ஆகிய படங்கள் போட்டி போட்டுக் கொண்டு பொய்யான வசூல் விபரங்களை அறிவிப்பதாக தெலுங்கு திரைவட்டாரத்தில் புகார் எழுந்தது.
இதற்கு முடிவுகட்ட திட்டமிட்ட தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கம், படங்களின் உண்மையான வசூல் குறித்த விபரங்களை தயாரிப்பாளர்கள் கில்டு மூலமாக அதிகாரப்பூர்வமாக வெளியிட போவதாக முடிவுசெய்துள்ளதாக கூறப்படுகிறது.
இது வருகிற கோடை விடுமுறையிலிருந்து புதிய முறை அமலுக்கு வரவுள்ளதாகவும் கூறப்படுகிறது.