பாடகர் S.P.பாலசுப்பிரமணியம் நெல்லூரில் உள்ள தனது பரம்பரை வீட்டைக் காஞ்சி மடத்துக்குத் தானமாக வழங்கிள்ளார்.
ஆந்திராவைச் சேர்ந்தவர் பாடகர் S.P.பாலசுப்பிரமணியம். இவர் இந்தியாவின் மிகப் பிரபலமான பாடகர்களில் ஒருவர்.
பதினாறு மொழிகளில் கிட்டத்தட்ட 40,000க்கும் அதிகமான பாடல்களைப் பாடி கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளார்.
நெல்லூரில் S.P.Bக்குச் சொந்தமான பரம்பரை வீடு திப்பராஜுவாரி தெருவில் உள்ளது.
சென்னைக்கு எப்போதோ குடியேறி விட்டதால் அவரது நெல்லூர் வீடு பல காலமாகப் பூட்டியே கிடந்ததாக தெரிகிறது. இதை வாங்குவதற்காகப் பலர் முயன்றாலும் S.P.B. இதை யாருக்கும் விற்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த வீட்டைக் காஞ்சி மடத்துக்குத் தானமாகக் கொடுக்கப்போவதாக எஸ்.பி.பி. அறிவித்திருந்தார். அதை இப்போது செயல்படுத்தியுள்ளார்.
காஞ்சி மடத்தைச் சேர்ந்த ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளிடம் தனது வீட்டை ஒப்படைத்தார் S.P.B.
அதில் ஒரு சமஸ்கிருத வேதப் பாடசாலையை ஆரம்பிக்கவே வீட்டை தானம் செய்தார் என்று கூறப்படுகிறது.