அமீர்கான் நடிக்கும் ‘லால்சிங் சாட்டா’ என்ற படத்தின் படப்பிடிப்பு ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடி பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தனியார் தங்கும் விடுதியில் தங்கியிருந்த நடிகர் அமீர் கானை செய்தியாளர்கள் சந்தித்தனர். அவர்களிடம் பேசிய அமீர் கான், ”தமிழ் சினிமா திறமைமிக்கவர்களை அதிகம் கொண்டிருக்கிறது. தமிழ் சினிமாவை நான் மிகவும் ரசிப்பவன். அதனால் தமிழ் சினிமாவில் நடிப்பதற்கு எனக்கு ஆசை அதிகம். ஆனாலும் வாய்ப்பு ஏதும் தற்போதுவரை முடிவாகவில்லை” என்றார்.
இதைத் தொடர்ந்து குடியுரிமைச் சட்டம் தொடர்பாக நடிகர் அமீர் கானிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால், அதற்கு நேரடியாகப் பதிலளிக்க மறுத்தவர், ”குடியுரிமைச் சட்டம் குறித்து பேச தற்போது நேரமில்லை” எனச் சொல்லிவிட்டு தங்கும் விடுதியில் இருந்து கிளம்பினார். மத்திய அரசின் செயல்களுக்கு எதிராக அவ்வப்போது குரல் எழுப்பி வரும் அமீர்கான் குடியுரிமைச் சட்டம் குறித்து மெளனமாகச் சென்றது அனைவரையும் வியப்படையச் செய்தது.