‘கே.ஜி.எஃப் 1’ படத்தின் தொடர்ச்சியாக வரும் ‘கே.ஜி.எஃப் 2’ படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில் இப்பட இயக்குனர் இயக்கும் அடுத்த படத்திற்கு ‘சலார்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் பாகுபலி புகழ் பிரபாஸ் கதாநாயகனாக நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக நடிகை சுருதிஹாசன் நடித்து வருகிறார்.
‘கே.ஜி.எஃப்’ படங்களைத் தயாரித்த ஹொம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என அனைத்து மொழிகளிலும் வெளியிடப்படவுள்ளது.படத்தின் பணிகள் முழு வீச்சில் நடந்து வரும் நிலையில் நடிகை சுருதிஹாசன் நடிக்கும் கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தில் அரசியல் நிருபராக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
படக்குழு முன்னரே அறிவித்தது போல ‘சலார்’ திரைப்படம் ஏப்ரல் 14 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.