சென்னை:-
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தனது அறக்கட்டளை மூலம் உதவியுள்ளார் நடிகை வரலட்சுமி.
மேற்கு வங்கம், ஒடிசா, ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த சேர்ந்த 2000 புலம்பெயர் தொழிலாளர்கள் இன்று சென்னையிலிருந்து அவர்களது சொந்த ஊருக்கு கிளம்பினர்.
இந்நிலையில் நடிகை வரலட்சுமி சரத்குமார் தன்னுடைய அறக்கட்டளையான சேவ் சக்தி (Save Shakti) அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் அவரது தாய் சாயா தேவி ஊடன் இணைந்து அவர்களுக்குத் தேவையான உணவு, தண்ணீர், முக கவசம் மற்றும் மருத்துவ பொருட்கள் என அவர்கள் ஊர் சென்று சேரும் வரை அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருள்களை மூலம் வழங்கினார்.
செய்தியாளர்களை சந்தித்த வரலட்சுமி சரத்குமார்:-
கொரோனா பரவலுக்கு அரசை மட்டும் குறை கூறக்கூடாது என்றும், நமக்கும் பொறுப்புணர்வு வேண்டும் எனத் தெரிவித்தார். சமூக இடைவெளியை பேணி முகக்கவசம் அணிவதை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என வரலட்சுமி சரத்குமார் கேட்டுக்கொண்டார்.