தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் ஹரி. இவர் சிங்கம், சாமி, பூஜை போன்ற பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். இயக்குநர் ஹரி இயக்கத்தில் கடைசியாக “சாமி 2” படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதனையடுத்து இயக்குநர் ஹரி நடிகர் அருண் விஜய் நடிப்பில் புதிய படத்தை இயக்கி வருகிறார். இதில் அருண் விஜக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார்.
மேலும் படத்தில் பிரகாஷ்ராஜ், ராதிகா சரத்குமார், அம்மு அபிராமி, யோகி பாபு, ஜெயபாலன் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். ராமச்சந்திர ராஜு வில்லனாக நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு தற்காலிகமாக ‘அருண் விஜய் 33’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு பழனியில் முழுவீச்சில் நடைபெற்று வந்த நிலையில் இயக்குநர் ஹரிக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதால் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இந்நிலையில் இயக்குநர் ஹரியின் உடல்நிலை குணமாகிவிட்டதால் மீண்டும் படப்பிடிப்பை தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது. அதன்படி ஏப்ரல் 13 தேதி அருண் விஜய் 33 படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
#AV33 #Arunvijay #TamilThisai #Cinema #Cinemanews #Cinematrend #cineupdate #Priyabhavanisankar #yogibabu #prakashraj #Hari16 #tamilcinema #Tamilmovie