தனுஷின் முந்தைய படமான பட்டாசு எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை, அதனால் அடுத்த படத்தின் வெற்றியை எதிநோக்கி காத்துக்கொண்டுள்ளனர் தனுஷியும் அவரது ரசிகர்களும்.
இந்த நிலையில் தான் இயக்குனர் மாரி செல்வராஜூதனுஷை வைத்து கர்ணன் என்ற திரைப்படத்தினை எடுத்து வருகிறார். இவரின் முதல் படமான பரியேறும் பெருமாள் தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கை நிலையினை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட திரைப்படம் இந்த பாடம் வெளியாகி அணைத்து தரப்பு மக்களிடமும் நல்ல வரவேற்பினை பெற்றது. அத்தோட பல்வேறு விருதுகையும் வாங்கியது.
அதனையடுத்து முதல் படத்தில் கிடைத்த வெற்றி உற்சாகத்தில் தன்னுடை அடுத்த படத்தினை தனுஷை வைத்து இயக்க தொடங்கினார். இந்திரப்படத்தின் படப்பிடிப்பு போன வருடமே தொடங்கிய நிலையில் கொரோன ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டனர். பின்பு சினிமா படப்பிடிப்பினை நடத்திக்கொள்ள அரசு அனுமதி அளித்த நிலையில மீண்டும் துவங்கப்பட்டது கர்ணன் படத்தின் படப்பிடிப்பு.
இந்த நிலையில் தான் இன்றுடன் படத்தின் அணைத்து காட்சிகளையும் எடுத்து மொத்த படப்பிடிப்பையும் நிறைவு செய்தது படக்குழு. ஆகையால் படத்தின் கதாநாயகன் தனுஷ் ட்விட்டர் வாயிலாக இணயக்குனர் மாரி செல்வராஜூ மற்றும் தயாரிப்பாளர் தாணு அவர்களுக்கும் தன்னுடைய நன்றியை தெரிவித்துள்ளார். பின்னர் தன்னுடன் சேர்ந்து பணியாற்றிய அனைவர்க்கும் தன்னுடைய நன்றியை தெரிவித்துள்ளார் அதனை அவரின் ரசிகர்கள் இணையதளத்தில் ட்ரெண்ட் செய்தும் லைக் செய்தும் தங்களுடைய மகிழ்ச்சியினை வெளிப்படுத்தி வருகிறார்கள்