சினிமா

நீங்கள் ஆட்சி பொறுப்பிற்கு வந்திருப்பது மிகுந்த நம்பிக்கை தருகிறது; நடிகர் சூர்யா !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக 159 தொகுதிகளில் வெற்றி பெற்று அறுதிபெரும்பான்மையில் ஆட்சியை பிடித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தின் அடுத்த முதல்வராக மு.க ஸ்டாலின் நாளை ஆளுநர் மாளிகையில் பொறுப்பேற்றுக் கொண்டார்.  

இந்நிலையில் நடிகர் சூர்யா முதல்வராக பதிவு ஏற்றுள்ள ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘முடித்தே தீர வேண்டிய’ பல காரியங்கள் வரிசைக் கட்டி முன்நிற்க, சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றிபெற்று ‘மக்களின் முதல்வராக’ பொறுப்பேற்றுள்ள மு.க. ஸ்டாலினுக்கு எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள். 

சுவாசிப்பதற்கு ‘உயிர் காற்று’ கூட கிடைக்காமல் மக்கள் அல்லல்படுகிற இந்தப் பேரிடர் காலத்தில், நீங்கள் ஆட்சி பொறுப்பிற்கு வந்திருப்பது மிகுந்த நம்பிக்கையை அளிக்கிறது. தங்கள் ஆட்சியில் அனைத்து துறைகளிலும் தமிழகம் வளர்ச்சியடையும் என்று நம்புகிறோம். தங்களுக்கும், ஆற்றலும் அனுபவமும் நிறைந்த தமிழக அமைச்சர் பெருமக்களுக்கும் மனப்பூர்வமான வாழ்த்துகள். 

ALSO READ  சிம்பு நடிக்கும் படத்தின் தலைப்பு வெளியாகியது..!

தமிழகத்தின் உரிமைகளை மீட்க தமிழர்களின் ஒருமித்த குரலாக இனி உங்கள் குரல் ஒலிக்கட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார். 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஜெயம் ரவியை இயக்கும் அஜித் பட கதையாசிரியர் !

News Editor

நம் செயல்களே சமூகத்தில் நம் மீது மரியாதையை கூட்டும்; நடிகர் அஜித் அறிக்கை !

News Editor

என் பெயரில் தவறு நடக்கிறது; நயன்தாரா பட இயக்குனர் எச்சரிக்கை !

News Editor