சென்னை:-
கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு – த்ரிஷா நடித்துள்ள ‘கார்த்திக் டயல் செய்த எண்’ குறும்படம் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, த்ரிஷா நடிப்பில் 2010ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் கெளதம் மேனன் தற்போது ‘கார்த்திக் டயல் செய்த எண்’ என்ற பெயரில் ஒரு குறும்படத்தை இயக்கி உள்ளார். இந்த குறும்படத்தின் டீசர் முன்னதாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில் தற்போது முழு படமும் வெளியாகி நல்ல வரவேற்பபை பெற்றுள்ளது.
இந்த குறும்படம் முழுக்க முழுக்க ஐ-போனில் படமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மொத்தத்தில் கார்த்திக் டயல் செய்த எண் பழைய குப்பைகளை கிளறுவதை விட புதிய குப்பைகள் உருவாகாமல் பார்த்துக் கொள்வது நல்லது.