கடந்த மார்ச் மாதம் கொரோனா பரவால்ல அச்சத்தால் திரையரங்குள் அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில் படங்கள் ஏதும் வெளியாகாமல் இருந்தது. இது சினிமா துறையை வெகுவாக பாதித்தது. அதனையடுத்து கொரோனா பரவல் தாக்கம் குறைந்துள்ளதால் தற்போது திரையரங்குள் திறக்கப்பட்டன. ஆனால் கொரோனா அச்சம் காரணமாக பக்கம் அதிக அளவில் திரையரங்கிற்கு வந்து படம் பார்ப்பதை தவிர்த்து வந்தனர்.
இதனையடுத்து பல திரைப்படங்கள் ஓடிடி தளங்களில் வெளியிடப்பட்டது. அது மக்கள் மாத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. இதனால் மக்கள் இனிமேல் திரையரங்குகள் வந்து படம் பார்ப்பதை விரும்ப மாட்டார்கள் என பேசப்பட்டது. இது இத்திரைப்பட பணியாளர்கள் மாற்று திரையரங்கு உரிமையாளர்கள் மத்தியில் பெரும் கவலையை உண்டாக்கியது.
அதனை போக்கும் வகையில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் பொங்கல் அன்று மாஸ்டர் திரைப்படம் திரையரங்கில் வெளியாகி மாபெரும் வரவேற்பினை பெற்றது. இன்னும் கொரோனா அச்சம் நீங்கவில்லை என்றாலும் அமோக வெற்றி பெற்று மிக பெரிய வசூல் சாதனையை படைத்து வெற்றிகரமாக திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது.
அதனையடுத்து கவலையில் இருந்த சினிமா துறையினரை இச்செய்தி உற்சாகம் அடையச்செய்துள்ளது. இந்நிலையில் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் மாஸ்டர் திரைப்படம் வரும் 29 ஆம் தேதி அமேசான் பிரைம் எனும் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.