தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
இந்திய சினிமாவின் பிரபல பின்னணி பாடகி அனுராதா பட்வல். இவர் பெருமபாலும் இந்தி பாடல்களே அதிகம் பாடியிருக்கிறார். இந்திய அரசின் நான்காவது உயரிய விருதான பத்மஸ்ரீ விருதினை பெற்றவர். மேலும் தேசிய திரைப்பட விருது இணையும் நான்கு முறை ஃபிலிம்ஃபேர் விருதினையும் பெற்றுள்ளார்.
தமிழில், அருண் விஜய்யின் ‘பிரியம்’ படத்திலும், தில் ரூபா தில் ரூபா, ‘கனவே கலையாதே’ படத்தில் இடம்பெற்ற பூசு மஞ்சள் பூசு மஞ்சள் உள்பட பல சூப்பர் ஹிட் பாடல்களை இவர் பாடியிருக்கிறார் .
இவரது மகன் ஆதித்யா பட்வல் (35). “தாக்கரே” படத்துக்கு இசை அமைத்திருந்தார். இந்நிலையில் சிறுநீரக கோளாறு காரணமாக இவர் மரணமடைந்துள்ளார்.
இதையடுத்து இவரது மறைவுக்கு பழம்பெரும் பாடகியான லதா மங்கேஷ்கர், பாடகரும் இசை அமைப்பாளருமான சங்கர் மகாதேவன் போன்ற பலர் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் .
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.