ஹைதராபாத்:-
பிரபல பளுதூக்கும் வீராங்கனை கர்ணம் மல்லேஸ்வரியின் வாழ்க்கை வரலாற்றுத் திரைபடத்தில் நடிகை ராகுல் பிரீத் சிங் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தற்பொழுது இந்திய சினிமாவில் பயோ பிக்குகளின் காலமாக உள்ளது. இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் கெடுத்தது மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.
இதைத்தொடர்ந்து இந்தியாவில் கிரிக்கெட் கடவுள் சச்சின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் சச்சின் டெண்டுல்கரை நடித்திருந்தார். நடிகை கீர்த்தி சுரேஷ் மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்று திரைப் படத்தில் நடித்திருந்தது கீர்த்தி சுரேஷ் திரைவாழ்க்கையில் மைல்கல்லாக அமைந்தது திரைப்படத்திற்காக கீர்த்தி சுரேஷ் தேசிய விருது பெற்றார்.
அதேபோல மறைந்த திரைப்பட நடிகரும் ஆந்திராவின் முன்னாள் முதல்வருமான என்டி ராமராவ் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் அவரது மகனும் நடிகரும் அரசியல்வாதியுமான நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா நடித்திருந்தார்.
1983 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்றதை நினைவு கூறும் வகையில் எடுக்கப்படும் திரைப்படத்தில் கபில்தேவ் கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் கிருஷ்ணமாச்சாரி கதாபாத்திரத்தில் தமிழ் நடிகர் ஜீவா ஆகியோர் நடிக்கிறார்கள்.
இவை தவிர மாயாவதி வாழ்க்கை படத்தில் ரிச்சா சட்டா, விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை கதையில் மாதவன், பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் வாழ்க்கை கதையில் ஸ்ரத்தா கபூர், கிரிக்கெட் வீராங்கனை மிதாலிராஜ் வாழ்க்கை கதையில் டாப்சி இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகர் விஜய் சேதுபதி ஆகியோர் நடிக்கின்றனர்.
இந்த நிலையில் ஆந்திராவை சேர்ந்த பிரபல பளு தூக்கும் வீராங்கனை கர்ணம் மல்லேஸ்வரியின் வாழ்க்கையும் படமாகிறது. இவர் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண்.
இந்த படத்தை சஞ்சனா ரெட்டி இயக்குகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகிறது. இதில் கர்ணம் மல்லேஸ்வரி வேடத்தில் நடிக்கும் நடிகை தேர்வு நடக்கிறது. ரகுல்பிரீத் சிங் பொருத்தமாக இருப்பார் என்று அவரை படக்குழுவினர் அணுகி பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் நடிப்பாரா? என்பது விரைவில் தெரியவரும்.