திருச்சூர்:
தமிழகத்திலிருந்து கோவை வழியாக கேரளாவின் பாலக்காடு-திரிச்சூர் நெடுஞ்சாலையில் செல்லும்போது வாளையாறு சோதனைச் சாவடியை கடந்து மலைப்பாங்கான மற்றும் குறுகிய வழிப் பகுதி வழியாக செல்ல வேண்டும். இது மிக குறுகிய பாதை என்பதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு அடிக்கடி விபத்துக்களும் நிகழ்ந்து வந்தது.
இதனால் கேரளா செல்லும் பொதுமக்களுக்கு மிகுந்த சிரமப்பட்டு வந்தனர். எனவே பீச்சி – வாழஹனி வனவிலங்கு சரணாலய பகுதியில் மலையை 1.6 கிலோமீட்டர் குடைந்து இரண்டு சுரங்க பாதை அமைக்க திட்டமிடப்பட்டது.
கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் வடக்கஞ்சேரி – மன்னூத்தி மார்க்கத்தில் வனவிலங்குகளுக்கு பாதிப்பில்லாமல் 1.6 கிலோமீட்டர் தூரத்துக்கு 2 சுரங்கப்பாதைகள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன.
5 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது ஒரு வழியில் சுரங்கப்பாதை பணிகள் முடிவடைந்தன. இதையடுத்து ஒரு வழி மட்டும் பொதுப் போக்குவரத்துக்காக கடந்த சனிக்கிழமை திறக்கப்பட்டது. இதனால் வாகனஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இன்னொரு சுரங்கப்பாதையில் நிலுவைப் பணிகளை டிசம்பருக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.