தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
மும்பை
மஹாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 1 சதவீத இடஒதுக்கீடு வழங்கி அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் மஹாராஷ்டிரா மாநிலம் தான் கொரோனா தொற்றின் மூலம் அதிகம் பேர் பாதிப்படைந்தார்கள். மஹாராஷ்டிரா மாநிலம் தற்போது கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வருகிறது. இச்சூழலில் கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தேவையான உதவித்தொகையை ஏற்கனவே அறிவித்திருந்தது.
இந்த நிலையில் கொரோனாவால் தனித்து விடப்பட்டவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 1 சதவீத இடஒதுக்கீடு வழங்கி மராட்டிய அரசு உத்தரவிட்டுள்ளது. மஹாராஷ்டிரா மாநிலம் அமைச்சரவை இதற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் சயோமதி தாக்கூர் தெரிவித்துள்ளார்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.