வாஷிங்டன்:
உலகெங்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு கோடிக்கணக்கான மக்கள் பலியாகி வருகின்றனர். கொரோனா
தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகள் தடுப்பூசி கண்டுபிடித்தன. கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் தடுப்பூசிகள் முக்கியப்பங்கு வகிக்கின்றன.
உலகம் முழுவதும் பல்வேறு நிறுவனங்களின் தடுப்பூசிகள் கொரோனா இந்தியாவிலும் கோவாக்ஸின் கோவிசிடு தொற்று பரவலை தடுப்பதில் முக்கிய பங்கு வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி கொரோனாவுக்கு எதிராக 91 சதவிகித செயல்திறன் கொண்டதாக உள்ளது. இந்த தடுப்பூசி அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிக்கு முழு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதுபோன்று பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை பூஸ்டராக போட்டுக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
65 வயதுடையவர்கள் மற்றும் கொரோனா தொற்று அபாயம் உள்ள இளைஞர்கள் 3-வது தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. அதுபோன்று முதல் 2 தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் 6 மாதத்துக்கு பின் 3-வது தடுப்பூசி போடலாம் என அமெரிக்கா அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.