இந்தியாவில் தொடக்கத்தில் அதிகமாக இருந்த கொரோனா தொற்று படிப்படியாக குறைய தொடங்கிய நிலையில் தற்போது மீண்டு அதிகரித்து வருகிறது. நாட்டின் பல மாநிலங்களில் கொரோனா பரவல் வேகமாக பரவிவருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத், தமிழ்நாடு உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் எந்த ஒரு தடுப்பூசியும் 100 சதவீதம் செயல் திறன் வாய்ந்தது இல்லை என்று எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் ரன்தீப் குலேரியா கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், எந்த ஒரு தடுப்பூசியும் 100 சதவீதம் செயல்திறன் வாய்ந்தது அல்ல என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்டாலும் கொரோனா தொற்று வரும். ஆனால் உடலில் உள்ள எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொரோனா வைரஸின் பாதிப்பை குறைக்கும். கொரோனா பாதிப்புகள் அதிகரிப்பதற்கு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் தடுப்பூசி போடும் பணி தொடங்கிய பிறகும், பாதிப்பு எண்ணிக்கை குறையத் தொடங்கியது.
அதனையடுத்து மக்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றுவதை நிறுத்திவிட்டனர். இதனிடையே ஏராளமான மத நிகழ்வுகளும்,தேர்தலும் நடைபெற்றது. மத உணர்வைப் பாதிக்காத வகையில் இதை நாம் கட்டுப்பாடுகளுடன் செய்ய முடியும். கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றுங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.