சீனாவில் இருந்து தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. இந்தியாவில் தொடக்கத்தில் அதிகமான எண்ணிக்கையில் தொற்று இருந்து வந்த நிலையில், பின்னர் இந்தியா முழுவதும் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வந்தது. ஆனால் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் 89 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும் நேற்று மட்டும் 714 பேர் இந்த நோயினால் உரியிழந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 41,280 பேர் கொரோனா தொற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.இது கடந்த டிசம்பர் மாதத்திற்குப் பிறகு ஒரேநாளில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் அதிகபட்ச எண்ணிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.
#corona #Coronapositive #Covid!9 #NewCoronaVirus #TamilThisai #Covaccine #Centralgovt #coronadeath #CoronaFightIndia #HealthMinistery #CoronaUpdate #COVID19PostiveCases #CoronaPatients