தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் 9,559 பேருக்கு பரிசோதனை செய்ததில் கடந்த 24 மணி நேரத்தில் 1,797 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் புதுச்சேரியில் 1,380 நபர்கள், காரைக்காலில் 244 நபர்கள், ஏனாமில் 123 நபர்கள், மாஹேவில் 50 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது 17,477 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 69,060 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
புதுச்சேரியில் புதிய உச்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 33 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் புதுச்சேரியில் 29 பேரும், காரைக்காலில் ஒருவரும், ஏனாமில் ஒருவர், மாஹேவில் 2 பேர் என 33 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்து மாநிலத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1212-ஆக உயர்ந்துள்ளது. இன்று சிகிச்சை பெற்று திரும்பியவர்களின் எண்ணிக்கை 1,670 ஆக உள்ளது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.