காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை “தனது மகன்” என்று அழைத்த வயதான பெண்மணி ஒருவர் அவருக்கு இனிப்பு வழங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது
கேரளாவில் உள்ள தனது மக்களவைத் தொகுதியான வயநாடுக்கு இரண்டு நாள் பயணமாக ராகுல் காந்தி சென்றுள்ளார்.
அப்போது, ராகுல் காந்தி பிறந்தபொழுது செவிலியராக பணியாற்றிய ராஜம்மா ராகுல் காந்தியை நேரில் சந்தித்து ராகுலுக்கு சாக்லேட்டுகளை வழங்கினார்.
மேலும், அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகளிடம் இதனை அளிப்பதற்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை, இது தாய்க்கும் மகனுக்குமான உறவு
ராகுல் காந்தி “எனது மகன்”, என்று கூறினார். அதேபோல், ராகுல் பிறந்தபோது தான் தான் முதல்முதலில் பார்த்ததாகவும் கூறினார்.
1970-ஆம் ஆண்டு ஜூன் 19-ஆம் தேதி டெல்லி Holy Family மருத்துவமனையில் தான் ராகுல் காந்தி பிறந்தார். ராகுல் காந்தி பிறந்த போது அவரது தாயார் சோனியா காந்தியின் பிரசவத்தை பார்த்த செவிலியர்களுள் ராஜம்மாவும் ஒருவர். ராகுல் பிறந்த பிறகு மருத்துவமனையில் அவரை ராஜம்மா தான் கவனித்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.