இந்தியாவில் கொரோனா வைரஸின் 2 ஆம் அலை வேகமாக பரவி வருகிறது. நாட்டின் பல மாநிலங்களில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தொடக்கத்தில் மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, போன்ற மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகமாக இருந்த நிலையில் தற்போது குறைய தொடங்கியுள்ளது. தமிழ்நாடு, கேரளா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகளவில் பரவி வருகிறது.
இந்நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,86,384 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்நோய்க்கு,3,660 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தொற்று பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2.75 கோடியை கடந்துள்ளது.
இந்தியாவில் நீண்ட நாட்களுக்கு பிறகு நேற்று 2 லட்சத்துக்கும் குறைவாக கொரோனா தொற்று கடந்த இரு தினங்களாக 2 லட்சத்தை கடந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் 2 லட்சத்துக்கும் குறைவாக பதிவாகியுள்ளது. இனி வரும் நாட்களில் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை மேலும் குறையும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.