பானாஜி:-
கோவா இந்தியாவில் கொரோனா நோயாளிகள் இல்லாத மாநிலமாக உருவாகியுள்ளது.
கோவாவில் 7 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த 7 பேருமே முழுமையாகக் குணமடைந்ததால் கொரோனா இல்லாத மாநிலமாக ஆகியுள்ளது.
கடந்த ஏப்ரல் மூன்றாம் தேதி கோவா மாநிலத்தில் மொத்தம் 7 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து இவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இவர்களில் 6 பேர் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பினர். ஏழாவது நபருக்கு மீண்டும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்குக் கொரோனா இல்லை எனத் தெரியவந்தது.
கோவாவை கொரோனா இல்லாத மாநிலமாகக் ஆக்குவதற்குத் தம்முடைய உயிரையும் பொருட்படுத்தாமல் ஓய்வின்றி உழைத்த மருத்துவர்கள், செவிலியர்கள், களப்பணியாளர்கள் ஆகியோருக்கு நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஸ்வஜித் ராணே டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளனர்.
இதேபோல முதல்வர் பிரமோத் சாவந்த், தலைமைச் செயலாளர் பரிமல் ராய், சுகாதார துறை செயலாளர் நீலா மோகனன் ஆகியோரும் தங்கள் நன்றிகளை தெரிவித்துள்ளனர்.