முத்திரை பயிற்சி: வருண முத்திரை
முத்திரை பயிற்சியில் இன்று நாம்
வருண முத்திரை பற்றி தெரிந்து கொள்வோம்.
நமது உடலில் 70 சதவீதம் நீர் இருக்கிறது.உடலில் நீர் சத்து குறைந்தால் இம்முத்திரை செய்வதன் மூலம் நீர்ச்சத்தை அதிகரிக்கச் செய்யலாம்.
மேலும் இப்பயிற்சியை செய்வதால்,
உடலில் நீர்ச்சத்து சமநிலை அடையும்.
கோடை காலத்தில் உடலில் ஏற்படும் நீர் இழப்பை சரிசெய்யும்.
உடற் சூடு தணியும், வியர்க்குரு மறையும்.
நீர்ச்சக்தியை மேம்படுத்தக்கூடிய திசுக்கள், செல்கள்,
தசைநார்கள் ஆகியவற்றின் செயல்பாடுகளை தூண்டும்.
சூட்டுக் கட்டிகள் வராமல் தடுக்கப்படும். கட்டிகள் இருந்தால் அவை விரைவில் மறையும்.
தோல் வறட்சி மறைந்து, தோல் மினுமினுப்பாகும்.
தோலில் ஏற்படும் அரிப்பு குணமாகும்.
தோலிலுள்ள சுருக்கங்கள் மறைந்து
இளமையான தோற்றம் உருவாகும்.
முகப்பரு நீங்கும்.
வாய் கண் உலர்வை நீக்கும்.உதட்டில் ஏற்படும் வெடிப்புகள் சரியாகும்.
உடலில் ரத்த ஓட்டம் சீரடையும்.செரிமானத்தை அதிகரிக்கும்.
செய்முறை:
• முதலில் ஒரு விரிப்பை விரித்து அதில் நிமிர்ந்து உட்கார்ந்து கொள்ளவும். நாற்காலியிலும் அமரலாம்.
• கண்களை மூடி ஒரு நிமிடம் மெதுவாக மூச்சை உள் இழுத்து மெதுவாக வெளிவிடவும்.
• பின் சுண்டு விரல் நுனியை கட்டை விரல் நுனியுடன் சேர்த்து ஒன்றை ஒன்று அழுத்துமாறு வைக்கவும்.
• மற்ற மூன்று விரல்கள் வளையாமல் நேராக இருக்க வேண்டும்.
• மூன்று விரல்களுக்கிடையே இடைவெளி இருக்க கூடாது.
• இரு கைகளிலும் செய்யவும்.
• பத்து நிமிடம் முதல் பதினைந்து நிமிடம் வரை செய்யவும்.
இந்த முத்திரையை எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் செய்யலாம்.
எஸ். ராஜலெக்ஷ்மி