இன்றைய காலத்தில் தூக்கம் என்பது கூட கடமைக்கு செய்யும் செயலாக மாறிவருகிறது. ஏறக்குறைய 65% பேர் வாரத்தில் சராசரியாக நான்கு நாட்கள் அசதியோடுதான் படுக்கையிலிருந்து எழுகின்றனர்.இந்த அசதிக்கு காரணம் சரியான தூக்கமும் உடல் ஆரோக்கியம் இல்லாததுமே காரணம்.இதில் தூக்கத்திற்காக சிலர் மருந்து மாத்திரைகளையும் பயன்படுத்துகின்றனர். இவ்வகை பழக்கத்தை மாற்றி இயற்கை உணவுகளோடு நல்ல தூக்கத்தைப் பெற முடியும் என்கிறது லண்டன் ஆய்வு..
பகலில் உண்ணும் உணவுகளுக்கும் அன்றைய இரவின் தூக்கத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகச் சொல்கிறது அந்த ஆய்வு. இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பு உணவில் சீஸ்,சால்மன் மீன்,முட்டை சேர்த்துக்கொள்வது நல்ல உறக்கத்தைக் கொடுக்கிறது.
முக்கியமாக சீஸ் கட்டிகளில் உள்ள செரோடோனின் தூக்கத்திற்கு காரணமான மெலடோனின் ஹார்மோனை அதிகளவில் தூண்டிவிடுகிறது. பால், செர்ரி,அவோகடா பழங்கள், ஓட்ஸ்,சோயா ஆகியனவும் மெலடோனினைத் தூண்டிவிடுகின்றன.
இந்த வகை உணவுப் பழக்கத்தால் நல்ல தூக்கத்தைப் பெற முடியும் என்றும்,இதற்காக மருந்து மாத்திரைகளைப் பயன்படுத்த தேவையில்லை என்றும் கூறுகின்றனர் ஆய்வாளர்கள் .