தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தலும் கன்னியாகுமரி தொகுதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. அதனையடுத்து அரசியல் காட்சிகள் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு, வேட்புமனு தாக்கல், தேர்தல் அறிக்கை, பிரச்சாரம் என தீவிரமாக இயங்கி வருகிறது. அந்த வகையில் தேமுதிக வேட்பாளர் ஞாபண்டிதனை ஆதரித்து கடலூர் தொகுதிலயில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், இயற்கை பேரிடரால் ஆண்டுதோறும் பாதிக்கப்படும் மாவட்டமாக கடலூர் இருப்பதாகவும், இதிலிருந்து மக்களை பாதுகாக்க எந்தவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கடந்த கால அரசுகள் எடுக்கவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.
முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரால் தீயசக்திகள், துரோகிகள் என அடையாளம் காட்டப்பட்டவர்கள் தற்போது தேர்தலில் களம் காண்பதாக விமர்சித்த டிடிவி தினகரன், தமிழகத்தில் லஞ்சம் லாவண்யம் இல்லாத நல்லதொரு ஆட்சி அமைய அமமுக – தேமுதிக கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.