டெல்லியின் முதலமைச்சராக 3வது முறையாக ஆம் ஆத்மி கட்சித்தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்றுக்கொண்டார்.
நடந்து முடிந்த டெல்லி சட்டமன்ற தேர்தலில் 70 இடங்களில் 62 இடங்களை கைப்பற்றி அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றது.
இதனைத்தொடர்ந்து டெல்லியின் முதலமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் பிப்ரவரி 16ம் தேதி பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற விழாவில் 3வது முறையாக அரவிந்த் கெஜ்ரிவால் முதலமைச்சராக பதவியேற்று கொண்டார். அவருக்கு துணை ஆளுநர் அனில் பைஜால் பதவி பிரமாணம் செய்து வைத்தார். மேலும் இந்த விழாவில் 6 அமைச்சர்களும் பதவியேற்றனர்.
பதவியேற்பு விழாவில் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்ட நிலையில், 50 பேருக்கு சிறப்பு அழைப்பு கொடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.