கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சியின் 4-வது ஆண்டு தொடக்க விழா சென்னையை அடுத்த தாம்பரம் சாய்ராம் கல்லூரியில் நேற்று நடைபெறுகிறது. . இதில், கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டு, சட்டமன்ற தேர்தலுக்கான விருப்ப மனு விநியோகத்தை தொடங்கி வைத்தார்.
இதையடுத்து, மேடையில் பேசிய அவர், திமுக, அதிமுக உட்பட அனைத்துக் கட்சிகளிலும் உள்ள நல்லவர்கள், மக்கள் நீதி மய்யத்தில் சேரவேண்டும் என அழைப்பு விடுத்தார். மேலும், தான் சொல்வதெல்லாம் முதலமைச்சர் செய்கிறார் எனக்கூறும் ஸ்டாலின், தமிழகத்தில் மதுக்கடைகளை மூடச் சொல்லுவாரா, எனவும் கமல்ஹாசன் கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், ‘ரஜினிகாந்திடம் நலம் விசாரிக்க தான் சென்றேன், அவரிடம் அரசியல் பேசவில்லை. ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை என்று கூறியவுடன் எப்படி ஆதரவு கேட்க முடியும் என்றார். தி.மு.கவிலிருந்து கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் தூது விடுவதை எல்லாம் ஏற்று கொள்ள முடியாது. தலைமையிடமிருந்து அழைப்பு வர வேண்டும்’ என்று தெரிவித்தார்.