விளையாட்டு

சேலத்தில் ஐபிஎல்: தோனி பங்கேற்பது உறுதி

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் சார்பில் அமைக்கப்பட்டு உள்ள கிரிக்கெட் மைதானத்தின் தொடக்க விழா இன்று நடைபெற்றது. சுமார் 13 ஏக்கர் பரப்பில் 8 கோடி ரூபாய் செலவில் இந்த கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட்டு உள்ளது.

ALSO READ  படமாகிறது கங்குலியின் வாழ்கை வரலாறு- தாதா கேரக்டரில் நடிக்க போவது யார்?

இந்த கிரிக்கெட் மைதானத்தை இன்று காலை 9 மணிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இந்த விழாவில் முன்னாள் இந்திய வீரர் ராகுல் டிராவிட், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் ரூபா கோபிநாத் மற்றும் பிசிசிஐ முன்னாள் தலைவர் சீனிவாசன் உள்பட பலர் பங்கேற்றனர்.

இந்நிலையில், கிரிக்கெட் மைதான திறப்பு விழாவில் பேசிய பிசிசிஐ முன்னாள் தலைவர் சீனிவாசன், சேலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் தோனி கண்டிப்பாக பங்கேற்பார் என தெரிவித்துள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

விராட் கோலி அதிரடி ஆட்டம்: 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

Admin

ஐ.பி.எல் போட்டியின் வீரர்கள் தேர்வு; ஏலம் தேதியை அறிவித்த நிர்வாகம்..!

News Editor

டோக்கியோ ஒலிம்பிக்ஸ்: காலிறுதியில் சதிஷ் குமார்- இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்?

naveen santhakumar