கடந்த 10 ஆண்டுகளில் சர்வதேச அளவில் சிறந்த கேப்டனாக தோனி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது.2019ஆம் ஆண்டு முடிய இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில் கடந்த பத்தாண்டுகளில் கிரிக்கெட்டின் ஒவ்வொரு துறையிலும் சாதித்த வீரர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டு வெளியிடப்பட்டு வருகிறது.
இதில் ஒரு பகுதியாக ஐசிசி தனது ட்விட்டர் பக்கத்தில், கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த கேப்டன் யார் என்ற கேள்வியை ரசிகர்களிடத்தில் எழுப்பியிருந்தது. அதற்கு கொடுக்கப்பட்ட ஆப்ஷன்களில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்நாள் கேப்டன் விராட் கோலி, கேன் வில்லியம்சன் உள்ளிட்ட பலர் இடம் பெற்றிருந்தனர்.
இந்த நிலையில் கடந்த பத்தாண்டில் சர்வதேச அளவில் சிறந்த கேப்டன் தோனிதான் என்பதை ரசிகர்கள் தேர்வுசெய்து உள்ளதாக ஐசிசி கூறியுள்ளது. 2007இல் இந்திய அணிக்கு கேப்டனாக பதவியேற்ற தோனி இந்திய அணிக்கு மூன்று விதமான உலக கோப்பைகள், டெஸ்டில் நம்பர் ஒன் அந்தஸ்து, உள்ளிட்ட பல வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார். கடந்த 2014ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியின் கேப்டன் பதவியில் இருந்தும், 2015ஆம் ஆண்டு உலகக் கோப்பை தோல்விக்குப் பின்னர் ஒருநாள் அணிக்கான கேப்டன் பதவியிலிருந்தும் இருந்தும் விலகினார்.
ஆனால் இந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பைக்கு பிறகு கடந்த 5 மாதங்களாக தோனி கிரிக்கெட் போட்டிகளில் பங்கு பெறாமல் ஓய்வெடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.