தமிழகம்

கரகாட்டக்காரியுடன் தொடர்பு… இளைஞனை கொலை செய்த நண்பர்கள்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

திண்டுக்கல் அருகே முறையற்ற தொடர்பினால் இளைஞர் ஒருவரை அவரது நண்பர்களே வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல்லை அடுத்துள்ள அஞ்சுகுழிபட்டியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் தனியார் கல்லூரியில் லேப் டெக்னீசியன் ஆக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்லூரியிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட நிலையில்நேற்று இரவு பெரிய பள்ளப்பட்டி அருகே சதீஷ்குமார் முகம் சிதைந்த நிலையில் இறந்து கிடந்தார்.

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கிடைக்க சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சந்தேகத்தின் பெயரில் அவரது நண்பர்களான பிரவீன் குமார் மற்றும் பார்த்திபன் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.

ALSO READ  குப்பைத்தொட்டியில் தலையில்லாமல் கிடந்த பெண்ணின் சடலம்:

விசாரணையில் கரகாட்டக்காரியான பிரவீன் குமார் மனைவியுடன் சதீஷ்குமார் முறையற்ற தொடர்பு வைத்துள்ளார். முதலில் மனைவியை கண்டித்த பிரவீன் குமார், பின் 1 வருட காலமாக பிரிந்து வாழ்ந்துள்ளார்.

ஆனால் மனைவியுடனான தொடர்பை சதீஷ்குமாரை தொடர்ந்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிரவீன்குமார், அவரை கொலை செய்ய திட்டமிட்டார். இதற்காக சதீஷ்குமாருடன் சேர்ந்து இருவரும் மது குடித்துள்ளனர். போதை தலைக்கேறிய உடன் சாப்பிட்டுக்கொண்டிருந்த சதீஷ்குமாரை பிரவீன் குமாரும் பார்த்திபனும் சேர்ந்து அரிவாளால் வெட்டிக் கொன்றுள்ளனர். இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சென்னையில் முகக்கவசம் (மாஸ்க்) அணிவது கட்டாயம்- மாநகராட்சி….

naveen santhakumar

அனைவருக்கும் முன்னோடியாக திகழ வேண்டிய ஆசிரியர் செய்யும் செயலா இது……!!!!!!!!!!!

naveen santhakumar

காருக்குள் அழுதாரா விஜய்; பேட்டி அளித்த IT அதிகாரி.

naveen santhakumar