தமிழகம்

சென்னையில் முகக்கவசம் (மாஸ்க்) அணிவது கட்டாயம்- மாநகராட்சி….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

சென்னையில் முகக்கவசம் (மாஸ்க்) அணிவது கட்டாயம் ஆகிறது, வீட்டைவிட்டு வெளியே செல்வோர் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். முக கவசம் அணியாமல் வெளியே சென்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவித்துள்ளார்.

சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட தகவலின் படி, சென்னையில் 205 பேருக்கு கொரோனா தொற்று உறுதி  செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவலைக்கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

ALSO READ  தமிழகத்தில் மழை, வெள்ள அபாயம் ..!

அந்த வகையில், சென்னையில் மாஸ்க் அணிவது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  வீட்டைவிட்டு வெளியே செல்வோர் கட்டாயம் மாஸ்க் (முகக்கவசம்) அணிய வேண்டும். மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும். 

வாகனத்தில் செல்வோர் முகக்கவசம் அணியாமல் சென்றால், வாகனம் பறிமுதல் செய்யப்படும் . மேலும் வெளியே செல்வதற்கான சிறப்பு அனுமதி சீட்டு போன்றவை ரத்து செய்யப்படும் என்று பெருநகர சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

ALSO READ  நிவர் புயலைத் தொடர்ந்து புரேவி புயலால் வெள்ளக்காடானது சென்னை:

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

எப்போது பக்ரீத் தலைமை ஹாஜி அறிவிப்பு…!

naveen santhakumar

வேலூரில் 40 க்கும் மேற்பட்டோருக்கு கருப்பு பூஞ்சை தொற்று !

News Editor

அப்படி என்ன சரக்குணே அடிச்ச ..? போதையில் தண்டவாளத்தில் தூங்கிய நபர்

News Editor