தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
சென்னை :
தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக முன்னாள் MP ஏ.கே.எஸ்.விஜயன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை தலைமை செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ளார். ஏ.கே.எஸ்.விஜயனின் பதவிக்காலம் ஒரு ஆண்டு ஆகும்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 17-ம் தேதி டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க இருக்கிறார். இந்நிலையில் ஏ.கே.எஸ்.விஜயன் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி என்பவர் மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் பாலமாக செயல்படுபவர் ஆவார். அந்த வகையில் இந்த பதவி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.