சென்னையில் இளம்பெண் ஒருவர் நிர்வாண நிலையில் சாலையில் நடந்து சென்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் எப்போதும் ஆள் நடமாட்டம் இருந்து வருவதால், போலீசார் அடிக்கடி ரோந்து பணியில் ஈடுபட்டு வருவார்கள்.
அவ்வாறு ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும்போது 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் துணி இல்லாமல் சாலையில் நடந்து சென்றதை கண்டு அதிர்ந்துபோன போலீசார் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அதன்படி உதவி காவல் ஆய்வாளர் ஜெயராமன் கையில் துணி எடுத்து வந்துள்ளார். அதனை அப்பெண்ணிற்கு போர்த்திவிட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது அந்த பெண் தெலுங்கு பேசியுள்ளார்.
திடீரென வயிற்றை பிடித்து கதறி அழுதுள்ளார். இதனால் காவல்துறையினர் அப்பெண்ணை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
மேலும் இச்சம்பவம் தொடர்பாக பெண்ணை பற்றி விசாரித்து, பெண் கடத்தப்பட்டாரா அல்லது பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.