தமிழகம்

20 வயது இளம்பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள்:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

திருநெல்வேலி:

20 வயது இளம் பெண் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர்கள் சுரேஷ்-இசக்கியம்மாள் தம்பதியினர். இசக்கியம்மாள் கர்ப்பமாக இருந்த நிலையில் பிரசவத்திற்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

ALSO READ  75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாணவி மதனா சாதனை

அங்கு அவருக்கு மருத்துவர்கள் ஸ்கேன் எடுத்தபோது அவரது வயிற்றில் 4 குழந்தைகள் இருப்பது உறுதியானது. ஆனால் பெண்ணின் உடல் நிலை மோசமாக இருந்ததால் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தனர்.

இதனை தொடர்ந்து அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு இளம் பெண்ணிற்கு இரண்டு ஆண் குழந்தையும் இரண்டு பெண் குழந்தையும் பிறந்தது.குழந்தையின் எடை குறைவாக இருப்பதால் இன்குபேட்டரில் வைக்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள் கூறுகையில் தற்போது தாய் மற்றும் குழந்தைகளின் உடல்நிலை சீராகி வருவதாக தெரிவித்துள்ளனர். தாயையும் நான்கு குழந்தைகளையும் காப்பாற்றிய மருத்துவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சசிகலாவை காண எங்களையும் அனுமதியுங்கள்; அமமுகவினர் போராட்டம் !

News Editor

தமிழக பட்ஜெட் : 8,930.29 கோடி ஒதுக்கீடு- நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

naveen santhakumar

கனமழை எதிரொலி: 6 மாவட்டங்களுக்கு விடுமுறை

naveen santhakumar