தமிழகம்

போலி ஈமெய்ல்: யூ ட்யூபர் மாரிதாஸ் மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

போலி இமெயில் மூலம் மோசடி செய்ததாக தனியார் தொலைக்காட்சி நிர்வாகி கொடுத்த புகாரின்பேரில், யூ ட்யூபர் மாரிதாஸ் மீது சென்னை சைபர் கிரைம் போலீசார் 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சமீபகாலமாக யூட்யூப் சேனல்கள் மட்டும் யூ ட்யூபர்களை தொடர்ந்து சர்ச்சைகள் சுற்றி வருகிறது. அண்மையில் போலி இமெயில் ஒன்றை  வைத்து தவறான தகவலை பரப்பி மோசடியில் ஈடுபட்டதாக, மாரிதாஸ் மீது தனியார் தொலைக்காட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார், 5 பிரிவுகளின் கீழ் மாரிதாஸ் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ALSO READ  இறுதி வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது ம.நீ.ம !

ஆவணங்களை பொய்யாக புனைவது, பொய்யாக புனையப்பட்ட டிஜிட்டல் ஆவணத்தை உண்மையானது போல காட்டுவது, நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் போலி ஆவணம் தயாரிப்பது மற்றும் தகவல் தொழில் நுட்பங்களை தவறாக கையாள்வது தொடர்பான 2 சட்டப் பிரிவின் கீழ் மாரிதாஸ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மாரிதாஸ் குறிப்பிட்ட ஒரு கட்சியை தொடர்ந்து தாக்கி பேசி வருவதாகவும், அதன் பின்னணியில் தேசிய கட்சி ஒன்று உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ALSO READ  வெளியாகிறது திமுகவின் வேட்பாளர் பட்டியல்; கவலையில் தொண்டர்கள் !

இதனிடையே தனக்கு வந்த இமெயிலையே தான் வெளியிட்டதாகவும் அதனை போலியாக உருவாக்கி அனுப்பியவர்களை போலீசார் தான் கண்டுபிடிக்க வேண்டும் என்று மாரிதாஸ் கூறியுள்ளார். 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வீட்டிற்கே காய்கறிகளை கொண்டு வரும் தமிழக அரசு.. ஆன்லைனில் ஆர்டர் செய்வது எப்படி????

naveen santhakumar

மானாவாரி சாகுபடிக்காக  கட்டுப்பாடுகளை தளர்த்திய மாவட்ட ஆட்சியர் !

News Editor

10 நாட்களில் தடையில்லா மின்சாரம் – மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி…!

News Editor